எமது நிறுவனத்தின் சீரான செயல்பாட்டு ஓட்டத்திற்காக கூட்டு பொறுப்புடையவர்கள். எங்கள் சிரேஷ்ட மேலாளர் நிர்வாக குழுவில் HNB நிதிக்கு முதுகெலும்பாக செயல்படத்தக்கதான வலுவான, அர்ப்பணப்புடன் செயல்படும் தனிநபர்களை உள்ளடக்கியுள்ளது.
அவர் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும், பட்டய மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார்......
அவர் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும், பட்டய மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தில் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளராகவும் உள்ளார். இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தில் வணிக மற்றும் நிதி நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாவும் பெற்றுள்ளார். இலங்கையில் நுண்நிதித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய உலக ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி கழகம் வழங்கிய 2014 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க மொழிபெயர்ப்பாளர் விருதைப் பெற்றார்.
ஐக்கிய இராச்சியத்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவகத்தில் தொழில்சார் பட்மேற்படிப்பு டிப்ளோமாவைப் பூர்த்தி செய்துள்ள அவர் சந்தைப்படுத்தல் தொழில்வாண்மையாளராகவும், இலங்கைச் சந்தைப்படுத...
திரு. மதுரங்க ஹீன்கெந்த | பிரதி பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர்
திரு. ஹீன்கெந்த, 20 வருடங்களுக்கும் மேலாக நிறைந்த அனுபவத்தையும், வங்கி மற்றும் நிதித்துறையில் தேர்ச்சிபெற்ற திறமையான ஓர் உத்தியோகத்தராவார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்திலும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்திலும் அங்கத்தவராக விளங்குவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் கார்டிஃப் நகரிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவகத்தில் வணிக நிர்வாகத்திற்கான முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். நிதிச் சேவைகளின் இடர்வரவு பற்றிய பட்டயச் சான்றிதழைப் பெற்றுள்ள திரு. ஹீன்கெந்த பிணையங்கள் மற்றும் முதலீடுகளுக்கான பட்டய நிறுவகத்தில் இணை அங்கத்தவராகவும் உள்ளார். மேலும், ஐக்கிய அமெரிக்காவின் போஸ்ரன் நகரிலுள்ள ஹார்வர்ட் வணிகக் கல்லூரியில் நிறைவேற்று அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தையும் பூர்த்திசெய்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவகத்தில் தொழில்சார் பட்மேற்படிப்பு டிப்ளோமாவைப் பூர்த்தி செய்துள்ள அவர் சந்தைப்படுத்தல் தொழில்வாண்மையாளராகவும், இலங்கைச் சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் தொழில்வாண்மையாளராகவும் விளங்குகிறார். மேலும், ஆசியாவின் சான்றளிக்கப்பட்ட தொழில்முறை சந்தைப்படுத்தல் உத்தியோகத்தரான திரு. ஹீன்கெந்த கடன் முகாமை, சந்தைப்படுத்தல், நிறுவன திட்டமிடல், வியாபாரக் குறியீடு, டிஜிட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் நுட்பங்கள் ஆகிய துறைகளில் 20 வருடங்களுக்கும் மேலாக அனுபவம்பெற்ற துடிப்பான ஒரு தலைமை நிருவாகியாக உள்ளார். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தால் 12 நிறுவனங்களிலிருந்து தெரிவுசெய்யபடுகின்ற “ஆண்டின் மிகச் சிறந்த முகாமையாளர்” என்ற வகையில் 2010ஆம் ஆண்டில் National Sales Congress (NASCO) விருது அவரது தொழில் வாழ்க்கையின் முக்கியமானதொரு மைல்கல்லாகவும் வெற்றியாகவும் அமைந்துள்ளது.
திரு. ஹீன்கெந்த ப்ரயிம் பினான்ஸ் கம்பெனி, எச்.என்.பி பினான்ஸ் பீ.எல்.சீ கம்பெனியுடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர் ப்ரயிம் பினான்ஸ் கம்பெனியில் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தராக செயற்பட்டுள்ளார். ப்ரயிம் பினான்ஸ் பீ.எல்.சீ கம்பெனயியில் இணைவதற்கு முன் சிட்டியன்ஸ் டிவளப்மென்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பீ.எல்.சீ கம்பெனயியில் பணியாற்றிய தனது 20 வருட கால தொழில் வாழ்க்கையில் அந்தக் கம்பெனியின் ஆதனங்கள், கடன் உத்திகள், புதிய தொழில்முயற்சிகள் மற்றும் சந்தைப்படுத்தல் மூலோபாயங்களைக் கண்காணித்துள்ளதுடன் அந்த நிறுவனங்களில் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர் மற்றும் உதவிப் பொது முகாமையாளர் உட்பட சிரேஷ்ட முகாமைத்துவம் சார்ந்த பல பதவிகளை வகித்துள்ளார்.
திரு. ருவன் பெரேரா அவர்கள் இத்துறை தொடர்பில் 22 வருட அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் இணைகின்றார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியின்......
திரு. ருவன் பெரேரா அவர்கள் இத்துறை தொடர்பில் 22 வருட அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் இணைகின்றார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியின் நுண்நிதித் துறையில் தனது தொழிலை ஆரம்பித்ததுடன் திரு. ருவன் பெரேரா அவர்கள் மனித வள முகாமைத்துவ விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் தேர்ச்சியின் ஊடாக தான் நிறுவனத்துக்குத் தேவையான வளம் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் வணிக நிருவாகம் தொடர்பான பட்டதாரியாவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தற்பொழுது வகிக்கின்ற பதவியின் ஊடாக தனது அனுபவத்தையும் நுட்பத்தையும் குறித்த துறைக்கு வழங்கியதன் ஊடாக பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.
திரு. பிமல் அவர்கள் நுண்நிதி துறையில் 16 வருட காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தில்......
திரு. பிமல் அவர்கள் நுண்நிதி துறையில் 16 வருட காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தில் சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ள அவர் நிதி உற்பத்தி சந்தைப்படுத்தலில் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதுடன் தான் பதவி வகிக்கும் நிறுவனத்தின் சொத்து என இந்த நிறுவனத்தின் இருப்பில் தடம் பதித்துள்ளார்.
திரு அபேசேகர, ப்ரயிம் பினான்ஸ் கம்பெனி, எச்.என்.பி பினான்ஸ் பீ.எல்.சீ கம்பெனியுடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர் ப்ரயிம் பினான்ஸ் பீ.எல்.சீ கம்பெனியில் பிரதிப் பிரதம நிறைவேற்று உ...
திரு பாலித அபேசேகர | தலைமை நிதி உத்தியோகத்தர்
திரு. அபேசேகர, இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்திலும், இலங்கையில் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்திலும் இணை அங்கத்தவராக உள்ளார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் இளமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
திரு அபேசேகர, ப்ரயிம் பினான்ஸ் கம்பெனி, எச்.என்.பி பினான்ஸ் பீ.எல்.சீ கம்பெனியுடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர் ப்ரயிம் பினான்ஸ் பீ.எல்.சீ கம்பெனியில் பிரதிப் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் / பிரதம நிதி உத்தியோகத்தராக செயற்பட்டுள்ளார்.
பீபள்ஸ் லீசிங், LOLC குழுமம், சென்றல் பினான்ஸ் மற்றும் LB பினான்ஸ் பிஎல்சி ஆகிய கம்பெனிகளில் முகாமையாளர் மற்றும் சிரேஷ்ட முகாமையாளர் பதவிகளை வகித்துள்ள அவர் நிதி மற்றும் லீசிங் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ள அனுபவம் வாய்ந்த ஒருவராகவும் விளங்குகிறார்.
திரு சுதாகர் பதினாறு (16) ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும், வங்கி நிதி மற்றும் பொருண்மை நிதி, இடர் முகாமைத்துவம் மற்றும் இணக்கம் ஆகியவற்றில் உறுதியான பின்னணியைக் கொண்டவரு...
திரு. மஹாதேவன் சுதாகர் | DGM/CRO – இடர் முகாமைத்துவம்.
திரு சுதாகர் பதினாறு (16) ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும், வங்கி நிதி மற்றும் பொருண்மை நிதி, இடர் முகாமைத்துவம் மற்றும் இணக்கம் ஆகியவற்றில் உறுதியான பின்னணியைக் கொண்டவரும், அர்ப்பணிப்புள்ள ஒரு நிபுணருமாவார். இவர் இறுதியாக 2022 மே 11 திகதி வரை, பிரைம் பினான்ஸ் பிஎல்சியின் பிரதி பொதுமுகமையாளர் – இடர் மற்றும் செயல் நுணுக்கம் / தலைமை இடர் அதிகாரி பதவியை வகித்த்துடன் அதன் பின்னர் எச்.என்.பி பினான்ஸ் பி.எல்.சி கம்பெனி மற்றும் எச்.என்.பி பினான்ஸ் பி.எல்.சி ஆகியவற்றின் இணைப்புடன் எச்.என்.பி பினான்ஸ் பி.எல்.சி இல் இணைந்தார்.
திரு. சுதாகர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவகம் (AIB – இலங்கை) மற்றும் பிணையங்கள் மற்றும் முதலீடுகளுக்கான பட்டய நிறுவனம் (ACSI – UK) ஆகியவற்றின் இணை அங்கத்தவராகவும் விளங்குகிறார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதியியல் நிபுணத்துவத்துடன் வணிக நிர்வாக முதுமாணிப் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிதியியல் கணிதத்தில் முதுமாணிப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற வணிக நிர்வாக இளமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
திரு. பிரபாத் அவர்கள் 2002 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடன் இணைந்து கொண்டார். நிறுவனத்துடன் இணைந்து......
திரு. பிரபாத் அவர்கள் 2002 ஆம் ஆண்டு எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடன் இணைந்து கொண்டார். நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட காலப்பகுதிக்குள் அவர் பிரதான தொழிற்பாட்டு துறை தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவு அறிவினைப் பெற்றுக் கொண்டார். 17 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் தனது வணிக அறிவு மற்றும் எண்ணக்கருவின் ஊடாக அவர் தொடர்ச்சியாக வணிகப் பணிகளில் ஈடுபடுகின்றார். அவர் நுண்நிதித் துறை தொடர்பான டிப்ளோமாதாரியும் [DMF (IBSL/FS)], கடன் முகாமைத்துவம் தொடர்பான டிப்ளோமாதாரியும் மற்றும் முகாமைத்துவ கற்கை நிறுவனத்தின் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாதாரியுமாவார்.
நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட அவர் உரிய தொழில்துறை மட்டுமன்றி வணிகத்தின் பல்வேறுபட்ட......
நுண்நிதித் துறையில் 17 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட அவர் உரிய தொழில்துறை மட்டுமன்றி வணிகத்தின் பல்வேறுபட்ட அம்சங்கள் தொடர்பான தேர்ச்சியையும் பெற்றுள்ளார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியுடனான அவரது சேவைக்காலம் 2001 ஆம் ஆண்டு வெளிக்கள நிறைவேற்றுநராக ஆரம்பித்து அவரிடம் காணப்பட்ட தெளிவான தேர்ச்சியின் காரணத்தால் ஒழுங்குமுறையாக அவரது தற்போதைய பதவி வரை முன்னோக்கிப் பயணித்துள்ளார். அவர் நுண்நிதித் துறை [DMF(IBSL/FS)] டிப்ளோமாதாரியாவதுடன் கடன் முகாமைத்துவம் தொடர்பான உயர் டிப்ளோமாதாரியுமாவார்.
நிதித் துறை தொழில்சார்பாளரான திரு. சமீர அவர்கள் நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக்......
நிதித் துறை தொழில்சார்பாளரான திரு. சமீர அவர்கள் நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவராவார். வணிகம் மற்றும் கணக்கியல் தொடர்பான நிறைவேற்று டிப்ளோமா மற்றும் வணிகம் மற்றும் நிதி தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் கொண்டுள்ளார்.
திரு. எராஜ் கனகரத்தினம் அவர்கள் நுண்நிதி நிறைவேற்று உத்தியோகத்தராக எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தில் இணைந்து கொண்டவராவார். அவரது செயலாற்றுகை, அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிமித்தம் க...
திரு. எராஜ் கனகரத்தினம் அவர்கள் நுண்நிதி நிறைவேற்று உத்தியோகத்தராக எச் என் பீ பினான்ஸ் நிறுவனத்தில் இணைந்து கொண்டவராவார். அவரது செயலாற்றுகை, அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிமித்தம் காட்டிய ஒழுக்க விழுமியங்கள் அவரது துரித உயர்வுக்கு காரணங்களாக அமைந்தன. கடந்த 18 ஆண்டுகளாக எச்என்.பீ நிறுவனத்துக்கு அவரால் வழங்கப்பட்ட அளப்பரிய சேவையின் அடிப்படையில் கிளை முகாமையாளர் , பிராந்திய முகாமையாளர் அதன் பின்னர் பிரதான முகாமையாளர் பதவி வரை திரு. எராஜ் அவர்கள் பதவியுயர்வு பெற்றார். பின்னர் அவர் வணிகக் கடன் பிரிவின் தலைவராக பதவியுயர்வு பெற்றதுடன் அப் பதவியில் பணிபுரிந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கி நிறுவனத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ளுவதற்கும் இளமையான தொழில் வல்லுநர் குழுவுக்கும் தலைமை வகிக்கின்றார். திரு. எராஜ் அவர்கள் இலங்கை வங்கியியலாளர் நிறுவனத்தில் நுண் நிதியியல் தொடர்பிலான டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுள்ளதுடன், வயம்ப பல்கழைக்கழத்தில் ஆங்கில டிப்ளோமாதாரியுமாவார். தீவிர கிரிக்கட் ரசிகரான திரு.எராஜ் அவர்கள் இலங்கை கிரிக்கட் நடுவர் சங்கத்தின் உறுப்பினருமாவார் என்பதுடன் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நடுவராகவும் தற்பொழுது செயற்படுகின்றார்.
திரு. லக்ஷ்மன் வங்கியல்லாத நிதியியல் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த நிபுணராகவும், எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் உதவிப் பொது முகாமையாளராக 19 வருடங்களுக்கு மேலான அன...
திரு. லக்ஷ்மன் வங்கியல்லாத நிதியியல் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த நிபுணராகவும், எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் உதவிப் பொது முகாமையாளராக 19 வருடங்களுக்கு மேலான அனுபவத்தையும் கொண்டுள்ளார். லக்ஷ்மன் 2018 இல் எச்.என்.பி பினான்ஸ் நிறுவனத்தில் பிரிவுத் தலைவராகவும், தங்கக் கடன்களுக்கான ஆரம்ப உறுப்பினராகவும் சேர்ந்தார். அன்று தொடக்கம் அவர் ஒரு பிரிவை உருவாக்கி, அதில் தனது நிபுணத்துவத்தைப் புகுத்தி எச்.என்.பி பினான்ஸ் தங்கக் கடன் (தயாரிப்பு) திட்டத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார். அதுமாத்திரமன்றி தங்கக் கடன் திட்டத்தை மேம்படுத்தும் அதேநேரம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் லக்ஷ்மண் முன்னணியில் நின்று செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
2004 HNB பினான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டதன் பின்னர் திரு. உஷான் அவர்கள் நிறுவனம் தொடர்பிலான முழு அனுபவத்தைக் கொண்டுள்ளவராவார்......
2004 HNB பினான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டதன் பின்னர் திரு. உஷான் அவர்கள் நிறுவனம் தொடர்பிலான முழு அனுபவத்தைக் கொண்டுள்ளவராவார். அவர் கணக்கியல், தொழிற்பாடுகள், கடன் தகவல் பணியக இணக்கப்பாடு , கிளை வலையமைப்புச் செயல்பாடுகள் மற்றும் மிக சமீபத்தில் வணிக செயல்முறை மீள் பொறியியல் தொடர்பில் அவர் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். 2 ஆண்டுகளாக BPR திட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திய பின்னர், BPR பிரிவொன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மேலும் பல செயல்பாட்டு செயல்திறன்களை நிறுவனத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவருமாவார் திரு. உஷான் அவர்கள் தற்போது BPR பிரிவின் தலைவராகவும் உள்ளார். திரு.உஷான் அவர்கள் ஒரு சான்றளிக்கப்பட்ட Lean Six Sigma Black Belt பெற்றுள்ளவருமாவார். இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தில் CCMF சான்றிதழும் CITI நிறுவனத்தில் ஆடை முகாமைத்துவ சான்றிதழும் பெற்றுள்ளதுடன் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தில் கடன் முகாமைத்துவம் தொடர்பான உயர் தொழில்சார் டிப்ளோமா பாடநெறியையும் கற்றுக் கொண்டிருக்கின்றார்.
நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஞ்ஜுல அவர்கள் கணக்கு உதவியாளராக......
நுண்நிதித் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. மஞ்ஜுல அவர்கள் கணக்கு உதவியாளராக எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் தனது தொழிலை ஆரம்பித்தார். நிறுவனத்தில் சேவையாற்றும் போது பொதுவாக கைத்தொழில் துறையில் குறிப்பாக அது சார்ந்த எண்ணக்கரு மற்றும் கணக்கியல் தொடர்பாக விரிவான மற்றும் மதிப்பிட முடியாத அனுபவங்களைக் கொண்டவராவார்.
இந்த தொழிற் துறையில் பதினெட்டு வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தினைக் கொண்டுள்ள திரு அநுர அவர்கள் மனிதவள முகாமைத்துவம், பயிற்சி மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் விசேட நிபுணத்துவத்...
கைத்தொழில் துறையில் 14 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவம், பயிற்சி மற்றும் அபிவிருத்தி துறையில் தேர்ச்சி பெற்றவராவார். எச்.என்.பீ பினான்ஸ் கம்பனியில் சேவையாற்றியதன் ஊடாக பெற்றுக் கொண்ட நுண்நிதித் துறை அனுபவத்தின் மூலம் கைத்தொழில் துறைக்குத் தேவையான ஆற்றலை அவர் பெற்றுக் கொண்டார். திரு. அனுர அவர்கள் மனித வள முகாமைத்துவ சான்றிதழ் பெற்றவர் என்பதுடன் நுண்நிதி டிப்ளோமாதாரியும் பயிற்சி மற்றும் மனித வள தேர்ச்சி அபிவிருத்தி தொடர்பான தேசிய டிப்ளோமாதாரியுமாவார்.
திரு.உதார அவர்கள் Telco & Finance துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான சந்தைப்படுத்தல் அனுபவமுள்ள ஒரு சிறந்த தொழில்வல்லுநராவார்......
திரு.உதார அவர்கள் Telco & Finance துறையில் 1 ஆண்டுகளுக்கும் மேலான சந்தைப்படுத்தல் அனுபவமுள்ள ஒரு சிறந்த தொழில்வல்லுநராவார். அவர் Dialog Axiata, Etisalat போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் மற்றும் சென்ட்ரல் பினான்ஸ் போன்ற பாரிய உள்நாட்டு வணிக நிறுவனங்களில் சேவையாற்றி நிறுவனப் பதவிகளின் உச்சிக்கே சென்றவராவார்.
2018 ஆம் ஆண்டு HNB பினான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டதன் பின்னர் திரு. உதார அவர்கள் நிறுவன மீள் – செயல்பாட்டில் ஒரு குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க அளவு தீர்மானமிக்க முக்கிய பங்கினை வகித்தவராவார். அவர் பல வெற்றிகரமான offline மற்றும் online சந்தைப்படுத்தல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். HNB பினான்ஸ் நிறுவனத்துக்காக ஏராளமான கௌரவத்தைக் கொண்டு வந்துள்ள திரு. உதார அவர்கள் தற்போது HNB பினான்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.
அவர் இங்கிலாந்தின் Cardiff Met பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MBA), இங்கிலாந்து பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் தொழில்சார் டிப்ளோமா சான்றிதழும் Asia Marketing Federation இனால் வழங்குகின்ற சான்றளிக்கப்பட்ட தொழில்சார் சந்தைப்படுத்துநர் (CPM) அந்தஸ்தையும் பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (MCIM) அங்கத்தவரும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின்(ASLIM) இணை உறுப்பினரும் ஆவார்.
திரு. சுஜித் குமார HNB FINANCE PLC. இன் தலமை அதிகாரி- கடன் மீள்பெறல் சமீபத்தில் பணியாற்றி வருகிறார்....
திரு. சுஜித் குமார HNB FINANCE PLC. இன் தலமை அதிகாரி- கடன் மீள்பெறல் சமீபத்தில் பணியாற்றி வருகிறார். HNB FINANCE இல் 16 வருட கால சேவை அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. சுஜித் குமார நிறுவனத்தின் பல பிரிவுகளில் கடமையாற்றி சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
2004இல் HNB FINANCE கம்பனியில் கள நிறைவேற்று உத்தியோகத்தராக சேவையில் இணைந்துகொண்ட திரு சுஜித் குமார தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமை காரணமாக படிப்படியாக பதவி உயர்வுகளை எட்டித் தொட்டு நிறுவனத்தின் பல படிநிலைகளை பிரதிநிதித்துவம் செய்துள்ளதோடு, கள முகாமையாளர், முகாமையாளர் – (மீள் அறவீடுகள் மற்றும் சட்டம்), கிளை முகாமையாளர், பிரதேச முகாமையாளர் மற்றும் சிரேஸ்ட முகாமையாளர் – மீள் அறவீடு போன்ற பதவிகளை வகித்து பல துறைசார்ந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
தொழில்சார் அனுபவத்திற்கு மேலதிகமாக அக்வைனாஸ் உயர் கல்வி நிறுவனத்தில் முகாமைத்துவ டிப்ளோமாவையும், முகாமைத்துவம் தொடர்பான உயர் டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ள திரு சுஜித் குமார ஐ.பி.எஸ்.எல் இல் நுண் நிதி டிப்ளோமாவையும் பெற்றுள்ளதுடன், தற்போது ஐக்கிய இராச்சியத்தின் க்லூஸ்டசெயார் பல்கலைக்கழகத்தில் MBA கற்கை நெறியைப் பயின்று வருகிறார்.
திருமதி ரசாங்கி தனது பதினேழு வருட கால தொழில் வாழ்க்கையில் வைப்புத் துறையை முதன்மைப்படுத்தி நிதித் துறையில் ஆழமான அறிவைப் பெற்றுள்ளார், ...
சட்டத்தரணி /பிரசித்த நொத்தாரிசு /சத்தியப் பிரமாண ஆணையாளர் மற்றும் கம்பெனிச் செயலாளராக விளங்கும் திருமதி. ராதிகா திசேரா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்ட இளங்கலைப் பட்டம் (LL.B) பெற்றவராவார். இத்தகைய தகைமைகளைப் பெற்ற
பின்னர் அவர் 20வருட கால அனுபவத்தைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற சட்ட நிறுவனங்கள்/வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/அரசு நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் திருமதி. ராதிகா நிறைந்த அனுபவத்தையும் பரந்த அறிவையும் கொண்டுள்ளார். மேலும், அசையா சொத்துகள் மீதான நிதி நிலை பகுப்பாய்வு, சட்டங்களை வரைதல், ஆவணப்படுத்தல் மற்றும் நியதிச் சட்டங்களுக்கும் சட்டங்களுக்குமான பொருள் கோடல்களை வழங்குவதில் சிறப்பறிவு கொண்டவர்.
திருமதி ராதிகா தற்போது கம்பெனியில் பதில் பொது முகாமையாளர் AGM – சட்டப் பிரிவின் தலைமை நிருவாகி மற்றும் கம்பெனியின் சட்டப் பிரிவை வழிநடத்தும் நபராகவும் உள்ளார்.
இந்தக் கம்பெனியில் இணைவதற்கு முன்னதாக அவர் பிரைம் பினான்ஸ் பி.எல்.சியின் சட்டப் பிரிவு தலைமை நிருவாகியாக இருந்துள்ளார்.
நிதி அமைச்சில் நிறைவேற்று உத்தியோகத்தராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த திருமதி. ராதிகா சட்டப் பிரிவில் / SRCC&T நிதிப் பிரிவு மற்றும் அமைச்சரின் அலுவலகத்தில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அவர் அமைச்சில் சட்ட/வணிக வருமானம் மற்றும்
தீர்வை வரி பரிவர்த்தனைகள், வழக்கு விவகாரங்களை கையாண்டுள்ளார்.
வர்னர்ஸ் சட்ட நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிரேஷ்ட துணையாளராக பணியாற்றியுள்ள திருமதி. ராதிகா அந்த நிறுவனத்திற்காக ஹட்டன் நஷனல் வங்கியினுடைய சட்டத்தரணிகள் குழாமில் சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளார். அதேபோல், ஹட்டன் நஷனல் வங்கியில் வீட்டுக் கடன் விவகாரங்களைக் கையாண்ட அவர் பாரிய கொழும்புப் பிராந்தியத்தின் அனைத்து HNB கிளைகளுடனும் ஒருங்கிணைப்பை மேற்கொண்டார்.
நிதிப் பரிவர்த்தனைகள்/கடன் முகாமைத்துவத்தின் சட்டப்பூர்வ நிலை /பொதுப் படுகடன் முகாமைத்துவம் மற்றும் நடுத்தீர்ப்பு அத்துடன் பிணக்குத் தீர்வுக்கான கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்காக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (UNITAR) சான்றிதழையும் பெற்றுள்ளார்.
திருமதி ரசாங்கி தனது பதினேழு வருட கால தொழில் வாழ்க்கையில் வைப்புத் துறையை முதன்மைப்படுத்தி நிதித் துறையில் ஆழமான அறிவைப் பெற்றுள்ளார், ஏசியன் பினான்ஸில் தனது தொழில் வாழ்க்கையைத் தொ...
திருமதி. ரசாங்கி வித்தான | CM/HOD – உற்பத்தி வணிக முகாமைத்துவம் (நிறுவன நிலையான வைப்பு)
திருமதி ரசாங்கி தனது பதினேழு வருட கால தொழில் வாழ்க்கையில் வைப்புத் துறையை முதன்மைப்படுத்தி நிதித் துறையில் ஆழமான அறிவைப் பெற்றுள்ளார், ஏசியன் பினான்ஸில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய திருமதி ரசாங்கி, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SLIIT) தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறப்புப் பட்டம் (BSc Hon. IT) மற்றும் Wover Hampton (UK) பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றுள்ளார். மேலும், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தில் (IBSL) இஸ்லாமிய வங்கித் தொழில் மற்றும் நிதி தொடர்பான சான்றிதழ் கற்கைநெறியைப் பூர்த்திசெய்துள்ளார்.
திரு. தேவாலகே நாட்டிலுள்ள முன்னணி வகிக்கும் சில நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் தொழிற்பாட்டுப் பணிகளை ஆற்றியிருப்பதுடன், நிதி மற்றும் குத்தகை துறையில் 17 வருடங்களுக்கும் மேலான அனுபவ...
திரு. அருஷ தேவாலகே, | பிரதம முகாமையாளர் /பிரிவுத் தலைவர் – தயாரிப்பு வர்த்தக முகாமைத்துவம் (குத்தகை)
திரு. தேவாலகே நாட்டிலுள்ள முன்னணி வகிக்கும் சில நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் தொழிற்பாட்டுப் பணிகளை ஆற்றியிருப்பதுடன், நிதி மற்றும் குத்தகை துறையில் 17 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். சிட்டிசன் டிவலோப்மென்ட் பேங் கம்பெனியில் நிறைவேற்று நிதி உத்தியோகத்தராக நிதித் துறையில் தன்னுடைய தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய திரு. தேவாலகே கிளை முகாமையாளராகவும், சென்ட்ரல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபினான்ஸ் லிமிட்டட் (CIFL) நிறுவனத்தின் உதவி முகாமையாளர், கொமர்ஷல் கிரெடிட் அண்ட் பினான்ஸ் பீ.எல்.சி. கம்பெனியில் சிரேஷ்ட முகாமையாளர் – சந்தைப்படுத்தல், கொமர்ஷல் கிரெடிட் அண்ட் பினான்ஸ் பீ.எல்.சி. கம்பெனியானது ட்ரேட் பினான்ஸ் பி.எல்.சி. கம்பெனியை தனதாக்கிய பின்னர் அந்தக் கம்பெனியில் இணைக்கப்பட்டு அங்கு தலைமை சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராகவும், ப்ரைம் பினான்ஸ் பீ.எல்.சி. கம்பெனியின் தலைமை பதவி (வர்த்தக அபிவிருத்தி)யினையும் வகித்துள்ளார். திரு. அருஷ தேவாலகே ப்ரேட்ஃபர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் வர்த்தக நிர்வாக முதுமானிப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.